நத்தம் அருகே பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

நத்தம் அருகே பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
தீமிதி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் 
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சேத்தூர் களத்துப்பட்டியில் கருமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சேத்தூர் களத்துப்பட்டியில் கருமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட் பு கடந்த 14-ஆம் தேதி கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து பத்தர்கள் காப்புக்கட்டினர். தொடர்ந்து அம்மனுக்கும், கம்பத்திற்கும் சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை நடந்தது.

விழா நாட்களில் அம்மன் ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம், அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் நடைபெற்றது.முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடந்தது.

இதில் பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பூக்குழி இறங்கினர். புதன்கிழமை பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் களத்துப் பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story