எடப்பாடியார் வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பு

எடப்பாடியார் வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பு

சிவகங்கையில் அதிமுக சார்பில் தொண்டர் ஒருவர் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேடமணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

சிவகங்கையில் அதிமுக சார்பில் தொண்டர் ஒருவர் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேடமணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர், பனங்குடி சேவியர் தாஸ் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காரைக்குடியை சுற்றியுள்ள கண்டனூர் பேரூராட்சி, கோட்டையூர் பேரூராட்சி மற்றும் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் ட்ரம்செட்கள் அடித்தவாறு வாகனத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கிருந்த ஒருவர் எடப்பாடியார் வேடமிட்டு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் ஐந்து விளக்கு பகுதியில் இருந்து காரைக்குடி பழைய பேருந்து நிலையம் வரை இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story