நாமக்கல் : கோட்டை பிள்ளையார் கோவிலில் குருபெயர்ச்சி விழா

நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவிலில் நடந்த குரு பெயர்ச்சி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்தரை மாதம் 18-ந் தேதியான நேற்று புதன்கிழமை (மே-1)குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாலை 5.19 மணிக்கு மேல் பிரவேசித்தார் , அதனை முன்னிட்டு, நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவிலில் உள்ள குருபகவான் என்கிற ( பிரகஸ்பதி) ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கும், ஸ்ரீ பாலமுருகனுக்கும்,ஸ்ரீ துர்க்கைக்கும் நூதனமாக தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதே சமயம் 108 சங்கு (வலம்புரி) அபிஷேகம் சிறப்பு யாகமும் நடைபெற்றது.தொடர்ந்து விநாயகர் பகவானுக்கு வெள்ளி கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story