காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ மே தின வாழ்த்து

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ மே தின வாழ்த்து

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் மே தின வாழ்த்து தெரிவித்தார்.


காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் மே தின வாழ்த்து தெரிவித்தார்.
தொழிலாளர்களின் உழைப்பில் இயங்கும் உலகம் ஒன்றுகூடி மே தினத்தை மனதில் நிறுத்தட்டும். பெரு முதலாளிகளின் சுரண்டல்களில் சிக்குண்டும் வறுமை தாண்டிய உழைப்பை வாரி வழங்கிய தொழிலாளர்கள் வீதிகளில் திரண்டு பெருங்கிளர்ச்சி செய்து தொழிலாளர் உரிமைகளை உறுதி செய்தார்கள். அந்தக் கிளர்ச்சியில் பிறந்ததே மே தினம். இந்தியாவில் 8 மணி நேர வேலை உறுதி உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்களை பாட்டாளிகளுக்கு கையளித்த அரசியல் சட்ட மேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வழியில் தொழிலாளர்களுக்கு துணை நிற்கும் தோழமையாக விடுதலை சிறுத்தைகள் களமாடி வருகிறது. அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் கைகளில் தொழிலாளர்கள் உரிமைகளை ஒப்படைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அகன்று புதிய விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் உழைக்கும் தொழிலாளர்கள் யாவருக்கும் இனிய மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story