இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணி - ப.சிதம்பரம்

இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணி - ப.சிதம்பரம்

இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது, அதனை யாராலும் உடைக்க முடியாது என முன்னாள் நிதியமைச்சர் ப‌.சிதம்பரம் கூறினார். |

இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது, அதனை யாராலும் உடைக்க முடியாது என முன்னாள் நிதியமைச்சர் ப‌.சிதம்பரம் கூறினார். |

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கண்டனூரில் தனது வாக்கினை பதிவு செய்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்திய கூட்டணி வெற்றி பெறும் என்று நான் உறுதியோடு நம்புகிறேன். இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும்.

பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம் என்றும் கூறினார். மேலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது என்றும், அது ஒரு வலிமையான கூட்டணி என கூறியதுடன், அமலாக்கத்துறை என்பது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story