மே தினத்தை முன்னிட்டு அன்னதானம்

கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளையின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கு அன்னதானம் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளையின் சேவையாளர் K. ரமேஷ் சலவையாளர் அவர்கள் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு முக்கிய தினங்களில் மாற்றுத்திறனாளிகள் , கண் பார்வை இல்லாதோர், குறைபாடு உள்ளோர்,மற்றும் முதியோர்கள், ஏழை எளியோர் என அனைவரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் வழங்கி வருகின்றார் இவரின் சேவையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அதன்படி மே ஒன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளையின் சேவையாளர் K. ரமேஷ் சலவையாளர், R. ராஜி இன்ஜினியர், B. வசந்தி, பாலகிருஷ்ணன், மற்றும் F.இ ராஜன் சர்வேயர் ஆகியோர் தலைமையில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 30 மாற்று திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப் பெற்றுக் கொண்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story