நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் மே தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு 138 வது ஆண்டு நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செங்கோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மே நினைவுச் சின்னத்தின் உருவப்படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 15 பேருக்கு மாவட்ட செயலாளர் தனது சொந்த செலவில் இன்சூரன்ஸ் பத்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி,மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், நகர திமுக செயலாளர் கார்த்திகேயன் மல்லசமுத்திரம் பேரூர் கழகச் செயலாளர் திருமலை ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ஒன்றிய குழு துணை தலைவர் ராஜவேல் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட சார்பணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story