நத்தம் - கஞ்சா விற்றவர் கைது

நத்தம் - கஞ்சா விற்றவர் கைது

பைல் படம் 

நத்தம் அவுட்டர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் அந்த பகுதியில் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி தலைமை யிலான போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது செந்துறை பிரிவு சாலையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சிறுகுடி மேற்குத்தெருவை சேர்ந்த மூக்கையா (38)என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story