புதிய ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் - ப.சிதம்பரம்

புதிய ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும் - ப.சிதம்பரம்

 புதிய ஆட்சிதான் மாற்றத்தை கொண்டு வரும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். 

புதிய ஆட்சிதான் மாற்றத்தை கொண்டு வரும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து அமைச்சர் பெரியகருப்பன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பிடிக்காத மாநிலத்தின் பட்டியலில் தமிழகத்தையும் பிரதமர் வைத்துள்ளார் என பேசினார்.

அப்போது அவ்வழியாக வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை, அமைச்சர் பெரிய கருப்பன் இரண்டு நிமிடங்கள் பரப்புரையாற்ற வேண்டுகோள் விடுத்த நிலையில், அதே பரப்புரை வாகனத்தில் ஏறி பேசிய ப.சிதம்பரம், பழைய ஆட்சி போய் புதிய ஆட்சி வந்தால்தான் புதிய திட்டங்கள், புதிய வரவுகள், புதிய செயல்பாடுகள் இருக்கும் என்றும், 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவை தோற்கடித்து இந்திய கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும், மூன்று ஆண்டுகளில் தமிழகம் வளர்ச்சி அடைந்தது போல் இந்தியாவும் வளர்ச்சி அடைய கை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் பரப்பரை செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story