முன்விரோத கோஷ்டி மோதலில் ஒருவர் கைது!

முன்விரோத கோஷ்டி மோதலில் ஒருவர் கைது!

வேலூர், கே.வி குப்பம் அருகே முன்விரோத கோஷ்டி மோதலில் ஒருவர் கைது; இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர், கே.வி குப்பம் அருகே முன்விரோத கோஷ்டி மோதலில் ஒருவர் கைது; இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த சின்ன நாகல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் பரத் (வயது 26). இவரை, நாகல் காலனியைச் சேர்ந்த ராகவன், சந்தோஷ்குமார், கார்த்தி ஆகியோர் முன்விரோதம் காரணமாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த பரத் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் பரத்தைத் தாக்கிய ராகவன் (வயது 20) என்பவரைக் கே.வி.குப்பம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story