மேல் பூதேரி கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

மேல் பூதேரி கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

 புதிய ரேஷன் கடை திறப்பு

மேல் பூதேரி கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் ஊராட்சி உட்பட்ட பகுதி மேல் பூதேரி கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செய்யாறு எம் எல் ஏ ஓ.ஜோதி கலந்து கொண்டு 9.22 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஓன்றிய குழு தலைவர் டி ராஜு வெம்பாக்கம் மேற்கு ஓன்றிய செயலாளர் தினகரன் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர் வெம்பாக்கம் வட்டாட்சியர் ராஜேஷ் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story