நீரேற்று நிலையத்தில் பாளை எம்.எல்.ஏ ஆய்வு

நீரேற்று நிலையத்தில்  பாளை எம்.எல்.ஏ ஆய்வு

எம்.எல்.ஏ அப்துல் வகாப்  ஆய்வு 

மணப்படை வீடு நீரேற்று நிலையத்தில் நடைபெற்று வரும் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியை எம்.எல்.ஏ அப்துல் வகாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை மணப்படை வீடு நீரேற்று நிலையத்தில் உள்ள மின் மோட்டார் பழுதானதால் பாளையங்கோட்டையில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் போராட்டம் நடத்தினார். இந்நிலையில் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் நேற்று (மே 1) மணப்படை வீடு நீரேற்று நிலையத்திற்கு நேரில் சென்று மின்மோட்டார் பழுது நீக்கும் பணியை ஆய்வு செய்து உடனே பழுதை நீக்கி தண்ணீர் வழங்க உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story