திருமங்கலத்தை சேர்ந்த கர்ப்பிணி சிறையில் உள்ள கணவரை விடுவிக்கக்கோரி மனு

திருமங்கலத்தை சேர்ந்த கர்ப்பிணி சிறையில் உள்ள கணவரை விடுவிக்கக்கோரி மனு

மனு அளிக்க வந்த கர்ப்பிணி

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் பாக்கியலெட்சுமி சிறையில் உள்ள கணவரை விடுவிக்கக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் பாக்கியலெட்சுமி சிறையில் உள்ள கணவரை விடுவிக்கக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு. மதுரை திருமங்கலம் டி.கொக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி.

இவரது கணவர் சத்யராஜ் மற்றும் மாமனார் ராஜேந்திரன் ஆகிய இருவர் மீதும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிம்மலதா தனது கணவர் சோலைமலை மரணத்திற்கு காரணம் என புகார் அளித்ததால் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு இடப்பிரச்சனை காரணமாக சோலைமலை மற்றும் சத்யராஜ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பிரச்சனையில் சோலைமலையை பிடித்து கீழே தள்ளியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தனது கணவர் மற்றும் மாமனாரை விடுவிக்க வேண்டும் எனவும், நிறைமாத கர்ப்பிணியாக உள்ள தனக்கு உதவி யாரும் இல்லை எனவும், மேலும் சிம்மலதா தனக்கு மிரட்டல் விடுப்பதாக கூறி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story