வெயிலின் தாக்கம் குறைய வேண்டி பூஜை

வெயிலின் தாக்கம் குறைய வேண்டி பூஜை

வெயில் தாக்கம் குறைய சிறப்பு பூஜை

தேவகோட்டையில் வெயிலின் தாக்கம் குறைய வேண்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வெளிமுத்தி விளக்கு சிவ ஸ்ரீ பட்டுக்குருக்கள் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சித்திரை பஞ்சமி திதியை முன்னிட்டு பால்குடம் மற்றும் பூத்தட்டு நடைபெற்றது. கோவில் அட்சய கணபதி சன்னதியில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். அதை தொடர்ந்து கோவில் முன்பு இருந்து பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.‌ இதில் நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும்,மழை பெய்ய வேண்டியும் வெயிலின் தாக்கம் குறைய வேண்டும் என குழந்தைகள் மற்றும் பெண்கள் பால்குடம் பூத்தட்டு எடுத்து வழிபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story