தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி

தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி

பைல் படம் 

நத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, இருசக்கர வாகனம் திருட்டு போன்ற தொடர் குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல், நத்தம், பழைய நீதிமன்றம் சந்து கல்மட தெரு பகுதியில் மர்ம நபர்கள் சீத்தாம்மாள் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.மேலும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நத்தம் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story