49 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்

49 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்

 காரைக்குடியில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர். 

காரைக்குடியில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா கலை அறிவியல் கல்லூரியில் 1972 முதல் 1975 ஆம் ஆண்டு வரை பிகாம் படித்து 49 ஆண்டுகளுக்கு பின்பு தங்களது குடும்பத்துடன் ஒன்று கூடி மகிழ்ந்தனர். அப்போது 105 பேர் படித்ததாகவும், தற்போது 76 பேர் சமூக வலைதளங்கள் whatsapp மற்றும் காவல்துறை அதிகாரி உதவியுடன் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர். இதில் 15 பேர் இறந்துவிட்டதாகவும் இன்னும் மூன்று நான்கு பேர் கண்டுபிடிக்க வேண்டியது உள்ளது என்றும் அவர்களையும் விரைவில் கண்டுபிடித்து ஒன்றிணைவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர். தற்போது 70 முதல் 74 வயதுடைய இவர்கள் கல்லூரி கால நண்பர்களை சந்தித்தபோது, எங்களுக்கு வயது மறந்துவிட்டது, இளமைப் பருவம் திரும்பி வந்துவிட்டது போல் எண்ணுவதாகவும், 25 வயது இளைஞர் போல் உணர்வதாக கூறினர்.

Tags

Read MoreRead Less
Next Story