வேலூர்: மது, சாராயம் விற்றதாக 12 வழக்குகள் பதிவு

வேலூர்: மது, சாராயம் விற்றதாக 12 வழக்குகள் பதிவு

பைல் படம் 

வேலூர் மாவட்டத்தில் கள்ள சந்தையில் மது மற்றும் சட்டவிரோதமாக சாராயம் விற்றதாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் நேற்று (29.04.2024) போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். பல இடங்களில் மர்மநபர்கள் மதுபானம், சாராயத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அரசு மதுபாட்டில்களை அதிகவிலைக்கும் விற்றனர். இதுதொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story