குடும்ப பிரச்சனை காரணமாக தொழிலாளி தற்கொலை

குடும்ப பிரச்சனை காரணமாக தொழிலாளி தற்கொலை

தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், மணக்காடு பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே சிறுமலை மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(43). கூலி தொழிலாளி.இவருக்கு திருமணமாகி மனைவியும்,3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன்,மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வம் கடந்த 21ம் தேதி விஷக்கிழங்கை சாப்பிட்டு உள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செல்வம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story