ஏற்காடு பஸ் விபத்து; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஏற்காடு பஸ் விபத்து; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

 ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பஸ் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பஸ் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் தனியார் பஸ் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயம் அடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

இந்த விபத்தில் உறவினரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story