24 மணி நேரமும் கண்காணிக்க இபிஎஸ் கட்சியினருக்கு வலியுறுத்தல்

24  மணி நேரமும் கண்காணிக்க இபிஎஸ் கட்சியினருக்கு வலியுறுத்தல்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கு வலியுறுத்தல்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கழக வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் தனி முகவர்கள் அதிமுக கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுத்துள்ளார். ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சுமுகமாக வாக்குப்பதிவு நடத்தி முடிக்க உடன் நின்ற மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு நிறைவு பெற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு என்னும் மையங்களுக்கு கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரை அதிமுக வேட்பாளர்களும் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் முகவர்களும் கவனக் குறைவாக இருக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story