ஆதி கேசவ பெருமாள் கோவிலில் இரவு ஆராட்டு விழா

ஆதி கேசவ பெருமாள் கோவிலில் இரவு ஆராட்டு விழா

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று இரவு ஆராட்டு விழா நடைபெறுகிறது.

திருவட்டார் கேசவப்பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி வாகனத்தில் பவனி வருதல், ஹரிநாம் கீர்த்தனம்,நாராயணீய பாராயணம், கதகளி, சொற்பொழிவு, பரத நாட்டியம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.9-ம் நாளான நேற்று மாலை சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரியை தொடர்ந்து இரவில் கோவி லில் இருந்து கருட வாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும்,

கிருஷ்ண சுவாமியும், எந்தவித வாத்தியக்கருவிகளும் ஒலிக்காமல் நிசப்தமாக தளியல் சிவன் கோவில் பகுதியில் வேட் டைக்கு எழுந்தருளினர்,தேங்காயில் அம்பு எய்யும் வேட்டை நிகழ்ச்சி முடிந்ததும். மேள தாளம் முழங்க, சிவன் கோவில், கருடாழ்வார் கோவில்.

பஜனைமடம் தளியல் முத்தாரம்மன் கோவில்முத்தாரம்மன் கோவில், நான்குமுனை சந்திப்பு வழியாக கோவிலுக்கு மேளதாளம் முழங்க திரும்பி வந்தனர்.வேட்டை முடிந்து திரும்பி வரும்போது வீடுகளிலிருந்து பக்தர்கள் மலர்களால் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர். கோவிலில் உள்ளே ஆதிகே சவப் பெருமாள் விக்ரகம் கொண்டு செல்லப்பட்டதும், தேவி வாசலை அடைத்து.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ண சாமியும் இன்று இரவு மூவாற்று முகம் ஆற்றில் ஆறாட எழுந்தருளுகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்ய, திருவிதாங்கூர் ராஜ பிரதிநிதி முன் செல்ல, பக்தர்கள் புடைசூழ ஆறாட் டுக்கு ஆற்றூர், தோட்ட வாரம் வழியாக மூவாற்று முகத்துக்கு விக்ரகங்கள் கொண்டு செல்லப்பட்டு ஆறாட்டு மற்றும் பூஜைகள் நடக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story