மும்பை இந்தியன் அணிக்கு தண்டனை வழங்கிய பிசிசிஐ!

மும்பை இந்தியன் அணிக்கு தண்டனை வழங்கிய பிசிசிஐ!

மும்பை இந்தியன்ஸ் 

ஐபிஎல் லீக் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது.

போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வந்து வீச்சிற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்க முடியவில்லை.

இது இந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக நடக்கிறது.

முதல் முறை நடந்த போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு 24 லட்சமும் மற்றவர்களுக்கு சம்பளத்தில் 25% அல்லது 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மூன்று ஆட்டங்களில் மட்டுமே வெற்றியைக் கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி இனிவரும் நான்கு போட்டிகளில் வென்றாலும் கூட பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தெரிகிறது.

Tags

Read MoreRead Less
Next Story