கும்பகோணம் கல்யாண சுந்தரம் பள்ளி கூடைப்பந்து போட்டியில் முதல் இடம்

கும்பகோணம் கல்யாண சுந்தரம் பள்ளி கூடைப்பந்து போட்டியில்  முதல் இடம்

கூடை பந்தாட்ட போட்டியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாநில அளவில் கூடைப்பந்து போட்டியில் முதல் இடம் பிடித்தது.

கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாநில அளவில் கூடைப்பந்து போட்டியில் முதல் இடம் மூன்றாவது மாநில அளவிலான ஒய்.எஸ்.பி.ஏ. மாநில சாம்பியன்ஷிப்-2024 கூடைப்பந்து போட்டி தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

இதில் கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தங்க பதக்கம் வென்று முதல் இடத்திலும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். கூ

டைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சி.பி.எஸ்.இ. பள்ளி முதன்மை தலைமை அதிகாரி முரளி ராவ், நிறுவனர் ஜி.கே. ராமமூர்த்தி, துணை முதல்வர்கள் பாலாஜி, பரமகுரு,மற்றும் உடற்கல்வித்துறை தலைவர் ராஜேஷ், கூடைபந்து பயிற்றுனர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டி தங்கம், சில்வர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் மாணவர்கள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story