இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. நடைபெறுமா?

இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. நடைபெறுமா?

ரோகித் சர்மா 

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 2007 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் மோதின. இதுவரை 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடியது கிடையாது.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாஹனுடன் ஆன்லைனில் உரையாடல் நடத்தினார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர்பாக ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும். அது நிச்சயமாக நடைபெறும் என நான் நம்புகிறேன். இது ஒரு நல்ல பந்தயமாக இருக்கும் என்று தான் நம்புவதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.


Tags

Read MoreRead Less
Next Story