போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இருவருக்கு 12 ஆண்டு கடுங்காவல்

போதைப்பொருள் கடத்திய வழக்கில், இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும் ரூ.1.70 லட்சம் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2020 ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் போதைப் பொருள் கடத்திய போது மெஹுல் பாப்னா, அகில் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருளை கடத்திய வழக்கில், சென்னையை சேர்ந்த இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும் ரூ. 1.70 லட்சம் அபராதமும் விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story