அணைக்கட்டு அருகே 1500 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல் அழிப்பு!

அணைக்கட்டு அருகே 1500 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல் அழிப்பு!

கள்ளச்சாராயம் ஊரல் அழிப்பு

வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் கள்ளசாராய வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள தேக்கு மரத்து கானாறு பகுதியில் வேப்பங்குப்பம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சாராய வேட்டைகள் ஈடுபட்டனர். அப்போது மலைப்பகுதியில் சட்டவிரோதமாக காய்ச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1500 லிட்டர் கள்ள சாராய ஊரல்களை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் சாராய அடுப்புகளையும் போலீசார் சுக்குநூறாக அடித்து நொறுக்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story