விபத்தில் உயிரிழந்த காவலர் - கண்கள் தானம்

விபத்தில் உயிரிழந்த காவலர் - கண்கள் தானம்

வேலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் படுகாயம் அடைந்து மூளை சாவு அடைந்த காவலரின் கண்களை பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர்.


வேலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் படுகாயம் அடைந்து மூளை சாவு அடைந்த காவலரின் கண்களை பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் 28.04.2024 இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணமாலை மற்றும் அவரது நண்பர் படுகாயமடைந்து இருவரும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அண்ணமாலை நேற்று (29.04.2024) மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதனை தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். இதையடுத்து காவலரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story