மாதிரி வாக்கு சாவடி மையத்தில் இரு மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு
மாதிரி வாக்கு சாவடி மையத்தில் இரு மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு
வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தர்பகராஜ் ஆகியோர் வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது வாணியம்பாடி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அஜித்தா பேகம் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story