உமாங் APP!!! PF பணத்தை எளிதாகப் பெறலாம்!

உமாங் APP!!! PF பணத்தை எளிதாகப் பெறலாம்!

உமாங் செயலி

உமாங் செயலி இருந்தால் ஒருசில நிமிடங்களில் உங்களின் பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.ஆதார் அட்டை தொடர்பான சேவைகள், வங்கி, காப்பீடு, வரி போன்றவை, போக்குவரத்து சார்ந்த MVO, E-Challan சேவை, கல்வி உதவித்தொகை, தேர்வு முடிவுகள், விவசாயி உதவித் தொகை, விவசாயக் கடன், இ-ஹெல்த், மருத்துவர்களுக்கான தேடல், ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பான சேவைகள், மின்சாரக் கட்டணம், எரிவாயுக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் ஆகியவற்றை செலுத்தலாம். எளிதாக பயன்படுத்தும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.உமாங் APP!!! PF பணத்தை எளிதாகப் பெறலாம்!

உமாங் செயலியை உங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆப்பில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஆதார் எண் அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தலாம்.

உமாங் செயலியில் பதிவுசெய்த பிறகு, நீங்கள் "EPFO" சேவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

"Login using Aadhaar” or “Login using mobile number" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் ஆதார் எண் அல்லது மொபைல் எண் மற்றும் OTP ஐ உள்ளிடவும்:

"சேவைகள்" மெனுவிலிருந்து "PF திரும்பப் பெறுதல்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:

"Claim Form" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது நீங்கள் உங்கள் PF திரும்பப் பெறுவதற்குத் தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும்.

சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்யவும்

உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். OTP ஐ உள்ளிட்டு "Confirm" கிளிக் செய்யவும்.

PF பணம் உங்கள் வங்கிக் கணக்கில் 7-10 வேலை நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படும்.

Tags

Read MoreRead Less
Next Story