ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று மாலை இ- பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் !!

ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று மாலை இ- பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் !!

ஊட்டி கொடைக்கானல்

ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ_பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை வெளியாகிறது. ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் கோடை விடுமுறை காலத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில் சுற்றுச்சூழலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி கொரோனா காலத்தைப் போலவே பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி கொடைக்கானல் ஊட்டிக்கு செல்லும் பயணிகளுக்கு வரும் மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலம் என்பதால் ஊட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் வாகன நெருக்கடி காரணமாக கொரோனா காலத்தில் இருந்து இபாஸ் நடைமுறையை வகுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறைக்காக தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பிரத்தியோக இணையதளம் தயார் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பெயர் ,ஆதார எண் ,சொந்த வாகன எண், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பித்து இபாசை டவுன்லோட் செய்து கொள்ளக்கூடிய வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இ-பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளை எத்தனை வாகனங்களுக்கு அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கு நடைமுறைகள் என்ன ?முழு வாகனங்களுக்கு விதிவிலக்கு எப்படி? போன்ற விவரங்கள் வழிகாட்டு நெறிமுறையில் இடம் பெறும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story