காதலி வீட்டு முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர்

காதலி வீட்டு முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர்
காதலி வீட்டின் முன் இளைஞர் தீக்குளிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே திருமணம் செய்துகொள்ள காதலி உடன்வராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம், நித்திரவிளை அருகே ஆற்றுப்புறம் பகுதியில் நேற்று மாலை 5. 30 மணி அளவில் ஒரு வாலிபர் உயர் ரக பைக்கில் வந்து ஒரு வீட்டின் முன்பு இறங்கினார். அவரின் கையில் ஐந்து லிட்டர் கேனில் பெட்ரோல் இருந்தது. திடீரென லைட்டரை ஆன் செய்து பெட்ரோலை தலையில் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். வாலிபர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மின்மோட்டார் மூலம் வாலிபர் உடலில் தண்ணீரை பீச்சி அடித்து தீயணைத்தனர்.

அதற்குள் தலை முதல் கால் வரை கருகிய நிலையில் வாலிபர் கீழே விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில் நித்திரவிளை போலீசார் விரைந்து வந்து வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர் விசாரணையில் தீக்குளித்த வாலிபர் புதுக்கடை அருகே சிறிய வண்ணான் விளையை சேர்ந்த மோகன் என்பவர் மகன் முகேஷ் (25) என்று தெரிய வந்தது. அவர் தீக்குளித்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், நேற்று குடும்பத்துடன் சென்று பெண் கேட்டதாகவும், பெண் வீட்டார் தற்போது திருமணத்திற்கு தயார் இல்லை என்று கூறியதாகவும், காதலியை அழைத்தபோது காதலி வராததால் உடலில் தீ வைத்துக் கொண்டார் என்றும் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story