அரக்கோணம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!
தூக்குப்போட்டு சலூன் கடைக்காரர் தற்கொலை;

அரக்கோணம் அடுத்த பருத்திப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32). இவர் அதேப்பகுதியில் சலூன் கடை நடத்திவந்தார்.இவரது மனைவி லாவண்யா. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த ஏழுமலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.