தாஜ்மஹால் தொடர்பான வழக்கில் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!
By : King 24x7 Desk
Update: 2024-04-26 10:38 GMT
மாசடைவதிலிருந்து தாஜ் மஹாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை 2 மாத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்ராவில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.