ரவுடிசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும்: டிஜிபி சங்கர் ஜிவால்
By : King 24x7 Desk
Update: 2024-09-28 13:52 GMT
ரவுடிசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லையில் டிஜிபி சங்கர் ஜிவால் பேசியுள்ளார். வழக்கு விசாரணையில் எந்த தொய்வும் இல்லாமல் பணி செய்ய வேண்டும். நெல்லை சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டும் தெரிவித்தார். சாதி, மத மோதல், போக்சோ பிரச்னை உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவர் ஜெயந்தி விழா வரவுள்ளதால் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.