கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை!!
By : King 24x7 Desk
Update: 2025-01-28 08:48 GMT
![கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை!! கேரளாவை உலுக்கிய இரட்டைக்கொலை!!](https://king24x7.com/h-upload/2024/03/19/1500x900_442944-murder.webp)
கொலை
பாலக்காடு அருகே பெண் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த நபர், கொல்லப்பட்ட பெண்ணின் கணவர், மாமியாரை இன்று கொலை செய்து தப்பி ஓடினார். 2019ல் சஜிதா என்பவரை கொலை செய்த செந்தாமரை சமீபத்தில் ஜாமினில் வெளியே வர, தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சஜிதாவின் கணவர் சுதாகரன் போலீசில் புகார் கூறியுள்ளார். இதனை அடுத்து செந்தாமரையை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், இன்று காலை சுதாகரன், அவரது தாயார் லக்ஷ்மி இருவரையும் கொலை செய்த செந்தாமரையை போலீசார் தேடுகின்றனர்.