ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு; கடை ஊழியர் இருவர் கைது!!

Update: 2024-05-09 13:15 GMT

shawarma

மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து கடை ஊழியர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த அந்த நபர் பிரதமேஷ் போக்சே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கடந்த மே 3ஆம் தேதி ட்ரோம்பே பகுதியில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். அதற்கு மறுநாள் அதாவது மே 4ஆம் தேதியே அந்த நபருக்கு பிரதமேஷுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

Similar News