தேர்தல் முடிந்த பின்னர் 1.60 கோடி பேருக்கும் மகளிர் உதவித்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
By : King 24x7 Web
Update: 2024-03-30 06:49 GMT
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் இதுவரை 1.16 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். தேர்தல் முடிந்த பின், 1.60 கோடி பேருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். தமிழகத்தில் நாமெல்லாம் ஒரு ரூபாய் வரி கட்டினால், ஒன்றிய அரசு நமக்கு வெறும் 28 பைசா தான் திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜ., ஆளும் குஜராத் போன்ற மாநிலங்களில் அவை அதிகரித்து வழங்கப்படுகின்றன.