ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகார்: நடிகை தமன்னாவுக்கு சம்மன்
By : King 24x7 Web
Update: 2024-04-25 05:51 GMT
ஃபேர்பிளே செயலி மூலம் ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஃபேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னா ஆஜராக மகாராஷ்டிரா சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது. சட்டவிரோத ஒளிபரப்பு மூலம் வியாகாம் நிறுவனத்திற்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அளித்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் ஏற்கெனவே நடிகர் சஞ்சய் தத்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தமன்னாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.