நகரி கோர்ட்டில் நடிகை ஜீவிதா ஆஜர்.

Update: 2023-12-13 01:50 GMT

கோர்ட்டில் ஆஜராக வந்த நடிகை ஜீவிதா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இதுதாண்டா போலீஸ், தர்மபத்தினி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜீவிதா ராஜசேகர். பிரபல நடிகையும் இயக்குனருமான இவர் நகரி நீதிமன்றத்தில் ஆஜரானார். தெலுங்கு படமான கருடவேக படத் தயாரிப்பில் நிதி பரிவர்த்தனையில் நடிகை ஜீவிதா கொடுத்த காசோலை 'பவுன்ஸ்' ஆனதாக, நகரி தொகுதி விஜயபுரம் மண்டலம் மகாராஜபுரம் சாய்சக்தி பொறியியல் கல்லுாரி உரிமையாளர் கோட்டேஸ்வரராஜூ மனைவி ஹேமாராஜூ நகரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நகரி நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. நடிகை ஜீவிதா ராஜசேகர் நகரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வேண்டும் என, நீதிபதி விஷ்ணுவர்மா உத்தரவிட்டார். இதையடுத்து ஜீவிதா நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதியிடம் ஜீவிதா, 'இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார். நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், ஹேமாராஜூ செய்த செலவுக்காக 10,000 ரூபாய் ஜீவிதா வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார், பின் ஜீவிதா தன் தரப்பில் உள்ள சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டார். நீதிபதி வழக்கை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News