கனகம்மாசத்திரம் அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்த மழை நீர்

கனகம்மாசத்திரம் அரசு பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்த மழை நீர் புகுந்ததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-12-05 12:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவள்ளூர் மாவட்டம், கனகமசத்திரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக பள்ளி வகுப்பறைக்குள் மற்றும் பள்ளி வளாகம் முழுவதிலும் முழங்கால் அளவு மழை நீர் தேங்கி உள்ளது இருப்பினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரையிலும் யாரும் நேரில் சென்று பார்வையிட்டு நீரை வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

மேலும் கடந்த மழைக்கு இதே போன்று பள்ளி வகுப்பறையில் மழைநீர் புகுந்தது தற்போதைய மழைக்கும் வகுப்பறைக்குள் மழை நீர் புகுந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்று மழை நீர் தேங்கி வந்தால் மாணவர்களின் படிப்பு வெகுவாக பாதிக்கும் என்றும் கட்டிடங்களும் விரைவில் பழுந்தடைந்து விடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News