போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் களமிறக்கும் 5-டோர் எஸ்.யு.வி. விளம்பரம் வெளீயிடு !

போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது குர்கா 5-டோர் எஸ்.யு.வி. மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது.

போர்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி.-க்களில் ஒன்றாக குர்கா மாடல் விளங்குகிறது.

இந்த மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், போர்ஸ் குர்கா 5 கதவுகள் கொண்ட மாடல் இந்திய சந்தையில் 2023 அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய குர்கா 5-டோர் வேரியண்ட் அதன் தற்போதைய 3-டோர் வேரியண்டை விட புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த மாடலில் 18 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

குர்கா 5-டோர் மாடல் இரண்டடுக்கு இருக்கைகளுடன் ஐந்து இருக்கைகள் மற்றும் மூன்றடுக்கு இருக்கைகளுடன் ஆறு இருக்கைகள் மற்றும் ஏழு பேர் அமரும் வகையில் கேப்டன் இருக்கை போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

போர்ஸ் குர்கா 5-டோர் மாடலில் மெர்சிடிஸ் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே போன்ற செட்டப் குர்கா 3-டோர் வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலையை பொருத்தவரை இந்த மாடல் தற்போதைய 3-டோர் வெர்ஷனை விட ரூ. 1.5 லட்சம் வரை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Tags

Next Story