துபாயில் ஓ.வி. கல்வி மையத்தின் சார்பில் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி

துபாயில் ஓ.வி. கல்வி மையத்தின் சார்பில் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி

துபாய் நகரில் தமிழக அரசின் தமிழ் விர்ச்சுவல் அக்காடமியின் அனுமதியுடன் ஓ.வி. கல்வி பயிற்சி மற்றும் குழந்தைகள் திறன் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்பில் ஏடு தொடங்குதல் சிறப்பு நிகழ்ச்சி துபாய் ஹோர் அல் அன்ஸ் நூலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய தலைவர் கலை தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், அமீரக பிரமுகர் டாக்டர் ஆயிஷா பெல்ரிகாட் அல் பலாசி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். மாணவ, மாணவியர் அ’ என்ற எழுத்தை எழுதி ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story