துபாயில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் !

துபாயில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் !

கலைஞர் நூற்றாண்டு விழா 

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி 101வது பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மக்களை தேர்தல் வெற்றி கொண்டாட்டம் துபாய் "லேன்ட்மார்க் ஹோட்டல் பனியாஸ் ஸ்கொயர்" வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் வாரிய குழு உறுப்பினரும், அமீரக திமுக பொறுப்பாளருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாடு செய்திருந்தார். அமீரக எழுத்தாளர் குழுமத்தின் ஆசிஃப் மீரான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில், ஏஜிஎம் பைரோஸ்கான் வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பாக நடைப்பெற்ற இந்த நிகழ்வில், தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு கால சாதனையை நினைப்படுத்தி திராவிடம் என்ன செய்தது என்று கூறியதோடு, மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில்

40 க்கு 40 என்ற பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் ஹமீது ரஹ்மான், கவிஞர் சசிக்குமார், எழுத்தாளர் ஜெஸிலா பானு,

காயிதே மில்லத் பேரவை பரக்கத் அலி, தமுமுக இப்ராஹிம், தமிழ் பண்பலை மகேந்திரன்,ஆர்ஜே சாரா, ரங்கராஜன் , கவிஞர் மரியம் கபீர் தாவூத், இஸ்மாயில், இன்ஜினியர் பாலா, வி.கேர் மணிகண்டன், ஜோடானா நசீர் திருநாவுக்கரசு, தொழிலதிபர் மீட்டா மேக்ஸ் கருணை குமார், ஷேக் பரீத் கல்வியாளர் ஸ்ரீவித்யா, ஏ டி சி பி ஸ்ரீலேகா, சீலா, முத்தமிழ் சங்க ஷா, இர்ஷாத், பருத்தி இக்பால், இஞ்சினியர் பாலா, இளமுருகன், ஃபரீத், தாரிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக பிளாக் துளிப் செந்தில் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் திரிகூடபுரம் முஸ்தபா அஹமது கபீர்,பாலா, உதயாநிதி ஸ்டாலின் நற்பணிமன்ற பாலா, பாருக், கொரடாசேரி ஜெகபர் அலி, அன்வர், இஸ்மாயில், மச்சேந்திரன், வல்லரசு உள்ளிட்ட ஏராளமான அமீரக திமுகவினர் கலந்து கொண்டனர். பின்னர் கலைஞர் அவர்களின் புகைபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யபட்டு, கேக் வெட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story