துபாய் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

துபாய் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் அல் பராக மருத்துமனையில் மிக சிறப்பாக நடைபெற்றது. IWF பேரவையின் துபாய் தலைவர் உமர் பாரூக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP தொழில் அதிபர் கடலூர் ஜூன்னா, தி மு க அமீரக தலைவர் SS மீரான், தொழிலதிபர் சிங்கபூர் ஹவுஸ் நசீர், ஈஃமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசீன், தொழிலதிபர் இளையான்குடி அபூதாஷீர், தொழிலதிபர் ஆபித்ஜுனைத், சகோதரி நைனா யாஸ்மீன், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் மொயிதீன் , ஜாஃப்பார் பாய் கடை ஒனர் ஜாஃப்பார் பாய் , சகோதரி RJ அஞ்சனா, மருத்துவர் முகம்மது இபுராகிம், விழிமாநில துணை செயலாளர் மூபாரக் , IWF அமீரக தலைவர் அப்துல் ஹாதி, அமீரக துணை தலைவர் AS இப்ராஹீம் , முன்னால் அபூதாபி மண்டல தலைவர் பொதக்குடி தாஜுதீன், DMK முஸ்தபா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொன்டார்கள்.

மண்டல நிர்வாகிகள் , கீழக்கரை ஜைனுல் ஆபிதீன் , சேக்தாவுத் , யாசீன் , மன்னை அமீன் , லால்பேட்டை யாசர் அராஃபாத் ,அன்சாரி , சாதிக், நியாஸ், கலீபதுல்லா. சோனாப்பூர் அயூப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமில் 80 க்கும் மேற்ப்பட்டோர் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்த சகோதர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது, உணவு ஏற்பாடு செய்த லால்பேட்டை தமுமுக விற்கு நன்றி கூறினர்.

Tags

Next Story