எகிப்தை சென்றடைந்த பாலஸ்தீனர்களுக்கான இந்திய உதவிப் பொருட்கள்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் போரால் காசா பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு உதவிடும் வகையில் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இந்திய அரசு விமானப் படை விமானம் மூலம் எகிப்து நாட்டின் கெய்ரோ நகருக்கு அனுப்பி வைத்தது. இந்த விமானங்களை இந்திய தூதர் அஜித் குப்தே வரவேற்று உதவிப் பொருட்களை செம்பிறை சங்க அதிகாரிகளிடம் வழங்கினார். இந்திய அரசின் உதவிப் பொருட்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story