புதுவையில் முனைவர் கி.பாண்டியன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா

புதுவையில் முனைவர் கி.பாண்டியன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் கி.பாண்டியன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் கி.பாண்டியன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் கி.பாண்டியன் எழுதியுள்ள சித்தர் பாடல்களில் வாழ்வியல் உண்மைகள், சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை நெறிகள் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. மயிலம் பொம்மபுர ஆதீனம், இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். நூலாசிரியர் கி.பாண்டியனுக்குச் சித்தர் இலக்கியச் செம்மல் என்ற விருதினையும் வழங்கி, அருளாசி வழங்கினார். நூலின் முதல் பிரதியை பிரான்சு நாட்டைச் சோ்ந்த பாவலர் பத்ரிசியா பாப்புராயர், மருத்துவர் முத்துராமன் சண்முகவேல், பர்மாவைச் சோ்ந்த க.சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் முனைவர் இளமதி சானகிராமன் தலைமை தாங்கினார். முனைவர் ஔவை இரா.நிர்மலா, மருத்துவர் க. கலைவேந்தன் ஆகியோர் நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றினர். விழாவில் க.தமிழமல்லன், சீனு.வேணுகோபால், பு.சொ.பூபதி, நெய்தல்நாடன், தி.கோவிந்தராசன், முனைவர் அரங்க. மு.முருகையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கி.பாண்டியன் ஏற்புரை வழங்கினார். பூங்குழலி பெருமாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இறுதியாக செ.திருவாசகம் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வயல்வெளிப் பதிப்பக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story