கெங்கவல்லி அருகே மர்மவிலங்கு கடித்து 20 ஆடுகள் இறப்பு

கெங்கவல்லி அருகே மர்மவிலங்கு கடித்து 20 ஆடுகள் இறப்பு

இறந்து கிடக்கும் ஆடுகள்


கெங்கவல்லி அருகே மர்ம விலங்கு கடித்து 20 ஆடுகள் பலியாகின.

கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி காட் டுக்கோட்டை பகுதியை சேர்ந்த வர் துரைராஜ். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணி. இவர்கள் தங்களது நிலங் களில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம விலங்கு கடித்ததில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 20-க்கு மேற்பட்ட ஆடுகள் செத்து கிடந்தன.

இதுகுறித்து வனத்துறை, கால்நடை பராமரிப்புதுறை மற்றும் கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கேயே ஆடுகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன முதற்கட்ட விசாரணையில் வெறிநாய் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story