சென்னையில் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டும் காவல்துறை

சென்னையில் விவரங்களை சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டும் காவல்துறை

கோப்பு படம் 

மற்றொருபுறம் இமெயில் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே இதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் பட்டியலை சேகரிக்கும் பணியில் சென்னை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இவ்வழக்கின் விவரங்களை தெரிவித்து, பழைய குற்றவாளிகளின் விவரங்களை சென்னை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து யாரெனும் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளனரா என்ற தகவலை பெற்று விசாரணை மேற்கொள்ள திட்டம்.

ஒரு புறம் இமெயில் அனுப்பிய நபரின் ஐடியை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மற்றொரு புறம் பழைய குற்றவாளிகளின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story