திருச்சி என்எஸ்பி சாலையில் மக்கள் கூட்டம்

திருச்சி என்.எஸ். பி ரோடு, மலைக்கோட்டை கடைவீதி, பெரிய கடை விதி, சிறிய கடை வீதி, மெயின் கார்டு கேட், உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கு ஆடை ஆபரணங்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் வருகை தந்துள்ளது, திருச்சி மட்டுமல்லாமல் பெரம்பலூர்,புதுக்கோட்டை, அரியலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவு வருகை தந்துள்ளனர்.

மேலும் பாதுகாப்பு ஏற்பாடு என்பது திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவர்கள் உத்தரவின் பேரில் 186 சிசிடிவி கேமராக்கள் , ஏழு கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்து கூட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story