நாமக்கல்: மே 27ல் திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல்: மே 27ல் திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.ராஜேஷ்குமார் 




திமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் முகவர்கள் பணி குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N.ராஜேஸ்குமார்MP விடுத்துள்ள அறிக்கையில்' "நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயற்குழுக் கூட்டம் வருகின்ற 27.05.2024 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இனமான பேராசிரியர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமையில், வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக துணை செயலாளருமான கே.பொன்னுசாமி ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெறும்.

அதுசமயம் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாது பங்கேற்க வேண்டும்.இதில் வருகிற 03.06.2024 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் முகவர்கள் பணி குறித்தும் மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story